சென்னை புறநகர் பகுதியில் 7 இடங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் போலீஸார் கடந்த 21-ஆம் தேதி நடத்திய சோதனையில், 5 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், ஹஸ்தினாபுரம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் இருந்து ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தக் கடைகளில் இருந்த ஸ்டீபன் கோபி (31), மகேந்திரன்(32), செல்வம் (31), முருகன் (50), செந்தில்குமார் (43), மனோகரன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.