சென்னையில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஆர்.சுந்தரி (34) பி.காசீம் (54), சூளை மேட்டைச் சேர்ந்த எம்.ஜக்குபர் அலி (22), சேலையூரைச் சேர்ந்த எம்.சீனிராஜ் (32), சி.கணேசன் (42), மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சி. ஜெயக்கோடி (50), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த எம். கணேசன் (55), எம்.சுப்பிரமணி (43), ஏ.தேவதாஸ் (59), வேளச்சேரியைச் சேர்ந்த ஆர். கண்ணுசாமி (52), மேற்கு வங்கத்தைச் சார்ந்த என். ராகுல்மாலிக் (20) ஆகியோர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனால் அவர்களை அந்தந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 11 பேரிடமிருந்தும் 9,220 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 1 கிலோ மாவா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.