சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப் பையால் ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2 -ஆவது நுழைவு வாயில் அருகே, ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாக டிராலியில் ஒரு மர்மப் பை கிடந்தது. இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மர்மப் பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவுமில்லை என தெரிய வந்தது.
பையைப் பிரித்து சோதனை செய்ததில் அதில் துணிகளும், சாக்லெட்டுகளும் இருந்தன. வெளியூரில் இருந்து சென்னை வந்த பயணி யாரோ, பையை தவறவிட்டு சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.