குடிபோதையில் கார் ஓட்டியதில் விபத்து: இளைஞர் கைது

சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். சென்னை நொளம்பூரில் வசித்து வரும் இவர் தனியார் இரு சக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சனிக்கிழமை இரவு குடிபோதையில் அயனாவரம் பகுதியில் கார் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோதியது.
 இதில் காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த கார்த்திகேயனை பிடித்து ஐசிஎப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற கார்த்திகேயனை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com