பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப்.18)-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 1.76 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
 இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.நடராஜன் கூறியது:
 பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை(பிப்.18) முதல் புதன்கிழமை (பிப்.20) வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com