பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப்.18)-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 1.76 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.நடராஜன் கூறியது:
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை(பிப்.18) முதல் புதன்கிழமை (பிப்.20) வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.