சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், செந்தில்குமார் ராமமூர்த்தி கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தந்தை ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.