வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடிய வழக்கு: மேலும் ஒருவர் கைது

சென்னையில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பல கோடி திருடிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


சென்னையில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பல கோடி திருடிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் பொதுமக்களின் செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், கடன் தருவதற்கு முன்பு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் தொகை வைத்திருக்க வேண்டும் எனக் கூறுவதாகவும், பின்னர் பொதுமக்களிடம்  பேசி ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு எண், பற்று அட்டை எண், ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, அந்தப் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடி மோசடி செய்து வந்தது.
சிலரிடம் அந்தக் கும்பல்,கடன் தொகை கிடைப்பதற்கு முன்பு தங்களது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அதைப் பெற்றுக்கொண்டு கடன் பெற்றுத் தராமல் அந்தக் கும்பல் மோசடி செய்தது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறைக்கு கடந்த இரு மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. புகார்களில் பல கோடி மோசடி  நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப் புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து,கடந்த 14 ஆம் தேதி 7 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் இவ் வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த ஜான்சன் (25) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com