பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையராகவும், நகராட்சி நிர்வாக ஆணையராகப் பணியாற்றி வந்த ஜி.பிரகாஷ் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி இணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.