சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரம் அடையாறு மண்டலம் கோட்டம் 182 திருவான்மியூர் நகர நல வாழ்வு மையத்தில் செயல்பட்டு வந்த ஆயுஷ் மருந்தகம் அடையாறு மண்டலம், கோட்டம்- 174 கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி நல வாழ்வு மையத்தின் முதல் மாடியில் வரும் 23-ஆம் தேதி புதன்கிழமை முதல் செயல்படவுள்ளது.
ஆயுஷ் மருந்தகம் கிண்டி மடுவங்கரை பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவதால் கிண்டி, மடுவங்கரை, கன்னிகாபுரம், நேருநகர், நரசிங்கபுரம், மசூதி காலனி, கக்கன் நகர், அம்பேத்கர் நகர், கிண்டி ஆதம்பாக்கம் சுற்றியுள்ள பகுதி வாழ் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.