சென்னை-திருநெல்வேலிக்கு  சிறப்பு கட்டண ரயில்: இன்று முன்பதிவு

பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது.

பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது.

சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 13-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். 

திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள்  அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை: எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06038) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com