பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது.
சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 13-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82602) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
எர்ணாகுளம்-சென்னை: எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06038) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.