திருட்டு வழக்கில் ஹாக்கி வீரர் கைது

சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஹாக்கி வீரர் கைது செய்யப்பட்டார்.


சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஹாக்கி வீரர் கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மோகன் (50). இவர் அதே பகுதியில் புத்தகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 3-ஆம் தேதி இவரது கடையில் பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.1.80 லட்சம் திருடப்பட்டது. மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்,  அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஹாக்கி வீரர் ஹாரி பிலிப் (53) திருடியது தெரியவந்தது.

இதையடுத்து ஹாரி பிலிப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com