தொழிலதிபர் கடத்தி கொலை:6 பேர் கைது

தொழிலதிபரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். 

தொழிலதிபரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சென்னை, அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த மாதம் மாயமானார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பண விஷயத்தில் சுரேஷ் பரத்வாஜூக்கும், அந்த வழக்குரைஞருக்கும் இருந்த தகராறில் கூலிப் படை மூலமாக சுரேஷ் பரத்வாஜை அந்த வழக்குரைஞர் கொலை செய்தது  தெரிய வந்தது. இதையடுத்து, கூலிப்படையாக செயல்பட்ட குடுமி பிரகாஷ், சுரேஷ் , மனோகர், ராஜா, சந்துரு, சதீஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதனிடையே, தலைமறைவாக உள்ள பெண் வழக்குரைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com