நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இறந்து கிடந்தவர், தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 5-ஆம் தேதி மின்சார ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் ர் இறந்து கிடப்பதாக எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற ரயில்வே போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர், சென்னை எம்.எம்.டி.ஏ.காலனியை சேர்ந்த சரவணன்(37) என்பதும், அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என்பதும் தெரியவந்தது. இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.