5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகே கேட்பாரற்ற நிலையில் நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்களை வெள்ளவேடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் அருகே கேட்பாரற்ற நிலையில் நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்களை வெள்ளவேடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீஸார் தரப்பில் கூறியதாவது: திருவள்ளூர் வெள்ளவேடு பகுதியில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டுபோவதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன் பேரில், வெள்ளவேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் போலீஸார் திருவள்ளூர்-கூடப்பாக்கம் சாலையில் புதன்கிழமை அதிகாலையில் திடீர் ரோந்து சென்றனர்.
 அப்போது, அந்தப் பகுதியில் 5 இரு சக்கர வாகனங்கள் தனியாக கேட்பாரற்ற நிலையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் யாருடைய வாகனம் என விசாரணை மேற்கொண்டதில் யாரும் உரிமை கோரவில்லையாம். அதைத் தொடர்ந்து அந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com