செப். 26-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் அருகே வெண்மனம்புதூர் கிராமத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் அருகே வெண்மனம்புதூர் கிராமத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்  தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வார முகாம் செப்டம்பர் 26-ஆம் தேதி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெண்மனம்புதூர் கிராமத்தில் பெட்ரோல் நிலையம் எதிரே நடைபெற இருக்கிறது. 
இம்முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதனால், இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோரிக்கை மனுக்களை அளித்தால், அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com