கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு, எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலாளர் வி.கோபால்நாயுடு, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதி தன்ராஜ், ஒன்றிய பாசறைச் செயலாளர் டி.சி.மகேந்திரன், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்குமார், மாணவர் அணிச் செயலாளர் இரா.சதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் இமயம் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், கட்சிப் பேச்சாளர் பரசுராமன், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோர் பேசினர்.
அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் பேசுகையில், அதிமுக ஆட்சி தொடர்ந்து
5 ஆண்டுகளை நிறைவு செய்யும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தைரியத்துடன் சந்திக்கும் என்றார். நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் லோகம்மாள் கருணாகரன், லட்சுமி சிவைய்யா, சிராஜுதீன், திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.