மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலராக இ.கே.லோகமணி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலராக இ.கே.லோகமணி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு பதவி மூப்பு அடிப்படையில் அதிகாரிகள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர். இதில், திருத்தணி கல்வி மாவட்டத்துக்கு கல்வி அலுவலராக இ.கே.லோகமணி தேர்வு செய்யப்பட்டார். அவர் பணிநியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தா.ராஜேந்திரனிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com