ஜலதி ஃபவுண்டேஷன் சார்பில், திருத்தணி ஜி.ஆர்.டி.பொறியியல் கல்லூரியில், மாணவியருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஜலதி ஃபவுண்டேஷன் தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். இதில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி, நர்ஸிங் கல்லூரி முதல்வர் சாந்தி ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.