பொன்னேரி வட்டத்தில் உள்ள இருளிப்பட்டில் சிஐடியு தொழிற்சங்கக் கிளை அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை வி.பி.சிந்தன் நினைவாக, சிஐடியு தொழிற்சங்க மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாரன் திறந்து வைத்தார். இதில், சங்கத்தின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.