வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம், சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில், குழந்தைகள் தின விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை டி.சசிகலா முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் எஸ்.சையத்நாசர் வரவேற்றார். அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி சிறப்புரை ஆற்றினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். விழாவில், சென்னாவரம் சுரேஷ், புருஷோத்தமன், அ.கிரிதரன், சீ.கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.