செங்கத்தில் நீர் பரிசோதனை ஆய்வகம் தொடக்கம்

செங்கத்தில் தேசிய ஊரக குடிநீர் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், நீர் பரிசோதனை ஆய்வக அலுவலகக் கட்டடம் திறப்பு விழா, ஆய்வகப் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றன.

செங்கத்தில் தேசிய ஊரக குடிநீர் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், நீர் பரிசோதனை ஆய்வக அலுவலகக் கட்டடம் திறப்பு விழா, ஆய்வகப் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றன.
 செங்கம் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் (பொ) சங்கரன் கலந்துகொண்டு புதிய அலுவலக கட்டடத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். தொடர்ந்து, நீர் பரிசோதனையையும் அவர் தொடக்கிவைத்து பேசினார்.
 நிகழ்ச்சியில் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி, ஓய்வு பெற்ற ஆணையாளர் கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் சந்திரகுமார், எல்.ஐ.சி. முகவர் அகிலன், பிரதோஷ வழிபாட்டு மன்றத் தலைவர் திருமால் மற்றும் ரீடு தொண்டு நிறுவன இயக்குநர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com