தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.