திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 300 காவல் நண்பர்களுக்கு சீருடை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 19 ஆண்டுகளாக காவல் நண்பர்கள் குழுவினர் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி சார்பில், கடந்த 12 ஆண்டுகளாக சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 13-ஆவது ஆண்டாக 300 காவல் நண்பர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ் தலைமை வகித்தார். அருணை பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் எ.வ.கம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகத்திடம் சீருடைகளை வழங்கினார். விழாவில் மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் நிர்வாகிகள் ஜி.ஜான் கிங்ஸ்லி, எம்.ஏ.தியாகுராஜ், எ.ஜெய்பிலிப்ஸ், ஏ.சிவராமன், எ.மணிகண்டன்,
ஆர்.ராஜசேகர், பி.சிவராமன், த.தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.