செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமை மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேளாண் உதவி இயக்குநர் சா.இல.ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளார்
கு.கங்காதரன் வரவேற்றார். வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் டி.பி.துரை, உறுப்பினர்கள் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, வேளாண்மை தொழில்நுட்ப முகமையின்
செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு, 2018 - 19ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வெம்பாக்கம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.