ஆரணி அண்ணா சிலை அருகே இருந்து நீர்நிலைகளில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலத்தை இந்து முன்னணியின் புதுச்சேரி கோட்டப் பொறுப்பாளர் டி.முருகையன் தொடக்கி வைத்தார். நகர இந்து முன்னணித் தலைவர் சி.ஏ.தாமோதரன் தலைமை வகித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் கூடுதல் எஸ்.பி. அசோக்குமார், கூடுதல் துணை எஸ்.பி.க்கள் செந்தில், குணசேகரன், அண்ணாதுரை,
காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா ஆகியோரின் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரணி மார்க்கெட் சாலை, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாடவீதி, பெரிய கடை வீதி, மண்டி வீதி வழியாகச் சென்ற ஊர்வலம் பையூரில் நிறைவு பெற்றது. அங்குள்ள பெரியபாறை குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டன.