வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெள்ளாறு, நல்லூர் உள்ளிட்ட 6 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பு சார்பில், அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற இந்த முகாமில், ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
இதில், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பைச் சேர்ந்த ஜேரோமியோ ஜெபஸ்டீன், ராஜேசகர், வினோத்குமார், உமாபதி, மரியவசந்தகுமார், புஷ்பதெரசா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.