குடிநீர் கோரி இந்திரவனம் கிராம மக்கள் மனு

குடிநீர் கோரி, சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராம மக்கள் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

குடிநீர் கோரி, சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராம மக்கள் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சிச் செயலர் குப்பனிடம் அந்தப் பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியிடம் மனு அளித்தனர். அப்போது, இந்திரவனம் ஆதிதிராவிடர் காலனிப் பகுதிக்கு 3 நாள்களுக்குள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com