திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.