ராஜபுஷ்கர் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ராஜபுஷ்கர் விருது பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபுஷ்கர் விருது பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
2015 - 16, 2016 - 17ஆம் கல்வியாண்டுகளில் சாரணர் பயிற்சி பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 பேருக்கு மாநில அரசின் உயரிய விருதான ராஜபுஷ்கர் விருதை மாநில ஆளுநர் பன்வாரிலால்புரோகித் அண்மையில் வழங்கினார். இந்த நிலையில், விருது பெற்ற மாணவர்கள், சாரண ஆசிரியர் எஸ்.சேட்டு ஆகியோரை விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி, கல்விக் குழும முதன்மை முதல்வர் ஜி.மதியழகன், முதல்வர் மு.வஹிதா, துணை முதல்வர் வி.அன்பழகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com