"ஒரு துளி நீரில் அதிக பயிர்' திட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.2.39 கோடி ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் "ஒரு துளி நீரில் அதிக பயிர்" திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.2.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் "ஒரு துளி நீரில் அதிக பயிர்" திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.2.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் துறையின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் நுண்ணீர்ப் பாசன விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வரும் மின்மோட்டார், நீர்தேக்கத் தொட்டிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர் வி.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
வேளாண் இணை இயக்குநர் செல்வசேகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜசேகர், வேளாண் துணை இயக்குநர் கோ.கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் பிரதம மந்திரி விவசாய நீர்ப் பாசனத் திட்டத்தில் "ஒரு துளி நீரில் அதிக பயிர்" என்ற மத்திய, மாநில அரசுத் திட்டத்தில் துணை நிலை நீர்மேலாண்மை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க ரூ.15,000 ஆயிரம், நீர்ப்பாசனக் குழாய்கள் வாங்க ரூ.10 ஆயிரம், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை குழாய் அமைக்க 
ரூ.25 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு பின்னேற்ப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் உதவி செயற்பொறியாளர் ரகுநாதன், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவிப் பொறியாளர் சுவாமிநாதன் மற்றும் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com