ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாலையம்மன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ரமேஷ் வரவேற்றார். துணைத் தலைவர் சிவமுருகன், பொருளாளர் டாக்டர் விஜயகுமார், கல்வியாளர்கள் கவிதா, சங்கரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் தாளாளர் ஆர்.சித்ரா ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஜம்மு - காஷ்மீரில் பங்கரவாதத் தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.