செய்யாறு அருகே கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு வட்டம், ஆராத்திரிவேளூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முரளி(35). கூலித் தொழிலாளி.
இவருக்கு சத்யா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான முரளி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் வைத்திருந்த
ரூ. 2 ஆயிரத்தை எடுத்து, மது அருந்தி செலவு செய்து விட்டதாகத் தெரிகிறது. இதை அவரது மனைவி சத்யா கண்டித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த முரளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோரணம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.