செய்யாறில் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு தொகுதி அதிமுக சார்பில், ஆரணி கூட்டுச்சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ வே.குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் கா.மாணிக்கம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், முன்னாள் ஒன்றியத் தலைவர் எம்.விமலாமகேந்திரன், அதிமுக நிர்வாகிகள் எம்.மகேந்திரன், அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஏ.வெங்கடேசன் பி.லோகநாதன், பூக்கடை ஜி.கோபால் ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணன், செபாஸ்டின்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.