ஆரணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கிளை திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.
அந்த அமைப்பின் மாநில அமைப்புச் செயலர் ப.புலெந்திரன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் எட்வின் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
கூட்டத்தில் ஆரணி கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, நகரத் தலைவராக வி.ரவி, நகரத் துணைத் தலைவராக பொன்.சேட்டு, நகரச் செயலராக எ.புகழேந்தி, நகரப் பொருளாளராக துரை.சரவணவேல், துணைச் செயலராக சண்.கதிரவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைப்பின் பொதுச் செயலர் சுப.விரபாண்டியனின் கருத்தரங்க நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.