கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

வேலூர் மத்திய சிறையில் அடைக்கச் சென்றபோது சாராய வியாபாரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கச் சென்றபோது சாராய வியாபாரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் உள்பட சுமார் 800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பலரும் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். 
இந்நிலையில், செங்கம் பகுதியைச் சேர்ந்த சேட்டு (50), சாராய வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 
சிறை வளாகத்துக்குச் சென்றவுடன் சேட்டுவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். பின்னர், அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com