குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியையொட்டி, காலை முருகப் பெருமானுக்கு மகா யாகம், சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் தேன்காவடி, புஷ்பக் காவடி, பரணிவேல் காவடி கமிட்டித் தலைவர்
எம்.ஆர்.அன்புக்கரசு, கந்த சஷ்டி விழாக் குழுத் தலைவர் எஸ். பிரகாசம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.