குடியாத்தம் திருஞான சம்பந்தர் மடத்தில் இன்று சூரசம்ஹாரம்

குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியையொட்டி, காலை முருகப் பெருமானுக்கு மகா யாகம், சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் தேன்காவடி, புஷ்பக் காவடி, பரணிவேல் காவடி கமிட்டித் தலைவர்
எம்.ஆர்.அன்புக்கரசு, கந்த சஷ்டி விழாக் குழுத் தலைவர் எஸ். பிரகாசம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com