வாலாஜாபேட்டை ஸ்ரீஆண்டாள் பக்தி பேரவை சார்பில், ஐயப்பன் மகா சங்கமம் என்ற பெயரில் ஐயப்பனின் பெருமைகளை விளக்கும் வகையில் ஆன்மிக விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஆன்மிக விழிப்புணர்வு ஊர்வலத்தை அம்மூர் ஸ்ரீஞானம் சுவாமிகள் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன், காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகி ஆர்.லஷ்மணன், ஐயப்பன் கோயில் நிர்வாகி ஆர்.மகேந்திர வர்மன், படவேட்டம்மன் கோயில் நிர்வாகி டபிள்யூ.ஜி.மோகன், விஸ்வ இந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் வி.ராமன், எஸ்.ராஜா, எஸ்.எத்திராஜ், ரா.மூர்த்தி, ஸ்ரீ ஆண்டாள் பக்தி பேரவை நிர்வாகிகள் ஆர்.ஜெயச்சந்திரன், ராஜா, சதீஷ்குமார், சிவசிதம்பரம், ஒருங்கிணைப்பாளர்கள் டி.சுதாகர்,
ஆர்.முரளி மற்றும் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் கோயிலுக்குச் சென்று படவேட்டம்மன் கோயிலில் நிறைவடைந்தது. அங்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கராமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சந்தனம், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.