இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

ஆம்பூர் நகரம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூரில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் நகரம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூரில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன் தலைமையில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்தனர்.  பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் சா.சங்கர் தலைமையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் கொத்தூர் மகேஷ், துணைத் தலைவர் சி.கே. பிரபு, மாதனூர் ஒன்றியத் தலைவர் மாணிக்கம், பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியத் தலைவர் சுரேந்தர், வேலூர் மத்திய மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரமேஷ், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் மாநிலத் தலைவர் 
ஜெ.அஸ்லம் பாஷா இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் இலியாஸ்கான், மாவட்ட இளைஞரணித் தலைவர் பைசல்
அமீன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரீத் அஹமத், சலாவுதீன், கவியரசன், விஜயலட்சுமி, ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
ஆலங்காயத்தில் காங்கிரஸ் பேரூராட்சி விவசாய அணி சார்பில், ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் இந்திரா காந்தி உருவப் படத்துக்கு, மேற்கு மாவட்ட விவசாய அணித் தலைவர் பாப்பையன், பொதுச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஆலங்காயம் ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர், ராஜேஷ், கார்த்திக், பஷீர், கோவிந்தராஜ், பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆற்காட்டில்...
வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 
விழாவுக்கு, மாவட்டத் தலைவர்  சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்து, இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.விநாயகம், மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், மகளிர் காங்கிரஸ் தலைவி சந்திரா, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் டி.மலர், நகர தலைவர்கள் கண்ணன்( ஆற்காடு), அப்துல் சுக்கூர் (மேல்விஷாரம்), ஆற்காடு ஒன்றியத் தலைவர் வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஜோதி நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு முகப்பில் உள்ள இந்திரா காந்தியின் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சீனிவாசன் தலைமை வகித்து, மாலை அணிவித்தார். 
மாவட்ட துணைத் தலைவர் கோபண்ணா ரவி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ராஜ்குமார் காங்கிரஸ் கொடியை ஏற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.எஸ்.மூர்த்தி இனிப்பு வழங்கினார். 
இதில், நகர பொருளாளர் ஜி.லவக்குமார், நகர துணைத் தலைவர் ஜெ.தமீன் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் என்.ஜெயக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மு.உலகநாதன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, ஜி.நாராயணன், நகர வர்த்தகர் பிரிவு தலைவர் விஸ்வநாதன், நகர பொதுச்செயலர் கே.சதீஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் நகர, ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில், புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப் படத்துக்கு, கட்சியின் நகர தலைவர் கே.ஆர். கண்ணன் மாலை அணிவித்தார்.
வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.வீராங்கன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் ஜி. விஜயேந்திரன், சிவாவெங்கடேசன், கோவிந்தராஜ், துரைமுருகேசன், கோபிகுமார், சுரேஷ், வெங்கடேசன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com