குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த மோர்தானாவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(55) . தொழிலாளியான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நண்பர்களுடன் மோர்தானா அணையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் காயமடைந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை இறந்தார்.
இதுதொடர்பாக கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்த கோவிந்தசாமிக்கு மனைவி தனலட்சுமி,
3 மகள்கள் உள்ளனர்.