ஆம்பூர் நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதுமனை கே.எம். நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் எம்.மதியழகன் தலைமை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலாளர் டில்லிபாபு, விவசாயப் பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் ஈ.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.அன்பரசன், சங்கர், ராமகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.