கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் சாவு

நாட்டறம்பள்ளி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்தார்.

நாட்டறம்பள்ளி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் இறந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணங்கோவில் ஊராட்சி, நாயனஅத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (75) விவசாயி. இவரது மனைவி குட்டியம்மாள் (68). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜா அப்பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக  உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக துரைசாமி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். அவர் 
வெள்ளிக்கிழமை  இறந்தார். 
இதையறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அப்போது, கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்த மனைவி குட்டியம்மாள் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணை பிரியாமல் இறந்த தம்பதியினருக்கு அப்பகுதி மக்கள், அதிமுக நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com