ஆற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆற்காடு சந்தாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உமர் செரீப் (63). இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை இவரது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.