ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி மக்கள் வசிப்பிடத்துக்கு வந்த புள்ளிமான் மீட்கப்பட்டு காட்டுப் பகுதியில் புதன்கிழமை விடுவிக்கப்பட்டது.
ஆம்பூர் அருகேயுள்ள அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது பொன்னப்பல்லி கிராமம். இந்
நிலையில் தண்ணீர் தேடி ஒரு வயதுடைய பெண் புள்ளிமான் பொன்னப்பல்லி - அபிகிரிப்பட்டரை சாலைக்கு வந்தது. அப்பகுதி விவசாய நிலத்தில் பணிபுரிந்தவர்கள் அந்த மானை மீட்டு ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் மானை மீட்டு காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.