வேலூர் சரக டிஐஜி மாற்றம்

வேலூர் சரக டிஐஜி வி.வனிதா, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜி வி.வனிதா, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள், காவல் துறையினரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் அனைத்துத் துறையிலும் இடமாற்றப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வேலூர் சரக டிஐஜி வி.வனிதா, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றிய வி.பாலகிருஷ்ணன், வேலூர் சரகத்தின் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்க உள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com