கவிஞர் அய்.து.பாபு மாசிலாமணி எழுதிய களத்தில் பிறந்த கவிதை' என்ற புத்தகம் வேலூரில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வேலூர் ஊரீசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழியக்க மாநிலச் செயலர் மு.சுகுமார் வரவேற்றார். இதில், புத்தகத்தின் முதல் பிரதியை கவிஞர் அப்துல்காதர் வெளியிட, அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார். பின்னர், கவிஞர் அய்.து.பாபு மாசிலாமணி ஏற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜெயசெல்வதாஸ், தமிழ்த் துறைத் தலைவர் த.மணிவண்ணபாண்டியன், பேராசிரியர் அசேன், முதுநிலைப் பேராசிரியர் அ.தியோடர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.