குடியாத்தம் நெல்லூர்பேட்டை அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிக். வித்யாலயா பள்ளியில் உலக தாய்மொழி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், தாய்மொழியின் பற்றை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பாடல்கள், கதைகள், உரைகள் இடம் பெற்றன. தொடர்ந்து, மாணவர்கள், தமிழ், வீர வணக்கம் என்ற வடிவில் அமர்ந்து தாய்மொழிப்பற்றை வெளிப்படுத்தினர்.
இதில், பள்ளித் தாளாளர் ஹீராலால் ஆர். சந்சேத்தி, பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் டி.பத்மநாபன், பள்ளியின் இணைத் தாளாளர் கே.எம்.இ.கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.