ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனோவா (43). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர். இவர், புதன்கிழமை ஆம்பூர் -பச்சகுப்பம் ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜெனோவாவுக்கு மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.