பேர்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் இருந்து ஆடுகளுடன் தவறி வந்த மான் குட்டி மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.
பேர்ணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (60) வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்காக அடுகள் வனப்பகுதிக்குச் சென்றன. இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆட்டு மந்தையில் 6 மாத பெண் புள்ளிமான் குட்டி வழிதவறி வந்துள்ளது. அதை கிராம மக்கள் பிடித்து வைத்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
வனவர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அங்கு சென்று மான் குட்டியை மீட்டு மோர்தானா விரிவு காப்புக்காடு பகுதியில் விட்டனர்.