ஒசூர் அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேம்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஒசூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களின் நோய் பாதிப்பு, சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் குளிர்காலம் நெருங்கி வருவதால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சில இடங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் களப்பணிகள், மருத்துவப் பணிகள், சுகாதாரப் பணிகள் ஆகியவற்றை பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
கிருஷ்ணகிரி, ஒசூர் அரசு மருத்துவனைகளில் மருந்து கையிருப்பு, உபகரணங்களின் செயல்பாடு, நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் ஒசூர் உள்ளதால் நோய் பரவும் அபாயம் குறித்து கண்காணித்து வருகின்றோம் என்றார்.