ஒசூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திருவடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம்


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திருவடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் முன்னிலையில் ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவிடை மருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பூத் கமிட்டியை வார்டு வாரியாக , ஊராட்சி வாரியாக மீண்டும் சரிபார்ப்பது, மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருப்பது, திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல் முறையாக வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்துஆலோசனை நடைபெற்றது.
இதில் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், துணைச் செயலாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாறன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோர மணி, நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com